இந்துக் கடவுளர்களில் மும்மூர்த்திகளாக அழைக்கப்படுபவர்கள் சிவனும், விஷ்ணு, பிரம்மா. பிரம்மா படைத்தலுக்கும், விஷ்ணு காத்தலுக்கும், சிவன் அழித்தலுக்கும் உரியவர்களாகச் சொல்லப்படுகின்றது. விஷ்ணு, சங்க காலத்திலிருந்தே தமிழில் ‘திருமால்’ என்றும், பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். இந்துசமயத்தின் ஒரு பிரிவான வைணவ சமயத்தினர் விஷ்ணுவையே முழுமுதற் கடவுளாக வழிபட்டு வருகின்றனர்.
விஷ்ணுவின் அவதாரங்கள்
உலகில் அதர்மம் தலையெடுக்கும்போது விஷ்ணு உலகில் அவதரித்து உலகைக் காப்பதாக வைணவர்கள் கருதுகின்றனர். இவருடைய அவதாரங்கள் பல. அவற்றுள்,
· மச்சம் - மீன் வடிவம்
· கூர்மம் - ஆமை வடிவம்
· வராஹம் - பன்றி வடிவம்
· நரசிம்மர் - மனித உடலும் சிங்கத் தலையும் கொண்ட உருவம்
· வாமனன் - குட்டையான மனித வடிவம்
· பரசுராமர்
· இராமர்
· பலராமர்
· கிருஷ்ணன்
· கல்கி
வட இந்தியர் சிலர் பலராமருக்கு பதிலாக புத்தரை பத்து அவதாரங்களுள் ஒருவராக கருதுகின்றனர். பாகவத புராணத்தில் இருபத்தைந்து அவதாரங்கள் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment